இந்த ஊடலை வேண்டாமென்கிறேன்


 

பேரன்பே!

எடையற்ற உன் கனம்

என் திசைகளை உருகுலைக்கிறது

என் உயிர் திவலைகளில்

ஊறவைத்த - உன் உலர் கரத்தின் 

அவ்வொற்றை ஸ்பரிசம்

வறண்டு வெடித்து

ஈ மொய்த்துக் கொண்டிருக்கிறது

 

தாபதப் பேறே!

கைக் கடந்து போவது தான்

வாழ்க்கையின் நிச்சயிக்கப்பட்டத் தத்துவமா?

திரும்பிப் பார்க்கும் போதெல்லாம்

கசையால் அடிப்பது மட்டும் தான்

வாழ்க்கை என்பதன் பேரருளா?

 

என் முதல் பூவே!

தேன் குடிக்கும் போது

முத்தங்கள் மட்டும் விதைத்து விட்டால்

நான் தான் ஒரு பட்டாம்பூச்சியா?

 

அழுந்த என் பாதம் பட்டப் போது

உயிர் வாடி விழுகிறாய் என்றால்

நீ தான் ஒரு பெரும்பூவா?

 

காலம் சற்று கடுமையாய் ஊதி விட்டக் காற்றில்

கரைந்து கலைந்து போவத்தான்

நம் காதல் என்பது வேலிப்பருத்தியா?

 

இல்லை!

நானென்பது ஒரு கனக்கும் வண்ணாத்தி

நீயென்பது ஒரு நந்தவனம்

நம் காதல் என்பது விழுது விட்ட பெரும் மரம்!

 

காயப்படாத காகிதம் தான்

கவிதைகளை பிரசவிக்குமா?

முலைக்காம்பை கடிக்காத குழந்தையும்

கடி வலி பொறுக்காத ஒருத்தாயும்

இங்கெங்கேனும் சீவிக்கின்றனரா?

 

வைராக்கியமே!

நாளைய புது நாள்

காயங்களுக்கு களிம்பிடும் என்றா நினைக்கிறாய்?

அடியே

அது புழுக்களை சேமித்துக் கொண்டிருக்கிறது!

 

காதலென்பது ஒற்றைவழிப் பாதையா?

பரஸ்பர பாதைகள் உருவாக்கப்பட்டு

பரஸ்பரம் ஆற்றுப்படுத்துவது தானே அது?

 

பெருஞ்சேயே!

ஊமைகளாகிப் போன நம் கண்கள்

கசிக்கின்ற அத்துணை துளிகளும்

உப்புக் கரிக்காமல் மண்ணில் விழுவது தான் வலிக்கிறது!


பரிமாற்றிய வார்த்தைகள் என்பது

சுறுக்கிட குத்திய நெருஞ்சி விதைகள் தான்!

இன்னும் ஆயிரம் வார்த்தைகள்

மயிலிறகாய் நம் பரஸ்பர பாதம் வருடிவிட

முளைக்காமலா போய்விடப்போகின்றது?

 

சௌபாக்கியமே!

கலைந்து அலையும் நீகங்கள்

இணைந்து புணர்ந்து

மழைகளை தூவத்தான் செய்கிறது!

 

கரையில் உடையும் அலைகள்

மீழ உருவெடுத்து

மீண்டும் கரையை முத்தமிடுகின்றது!

 

பசியால் தவித்துக் கொண்டிருக்கிறேனடி

பைத்தியக்காரி!

 

வா..

கண்ணீர் துடைத்து விடுகிறேன்

உன் சிறுமுலையை வாயில் திணித்து


தாய்ப் பால் பாய்ச்சு!

கடிக்காமல் குடிக்கிறேன்!


 - ஹஜன் அன்புநாதன் -

Comments

Popular posts from this blog

முத்தங்கள்

நட்சத்திரங்களடி

அந்தி மழை

காதல்

மோக முள்

இருபதுகளில் நான்!

அண்ணே ஒரு டீ...

ஆறாம் புலன்