முலைகொண்டு ஒரு கவிதை எழுதுகின்றேன்
மானே மயிலிறகே
மாசற்ற மாதுளையே
கண்ணே கனியமுதே
கவிதை பெட்டகமே
பாவியுன் தாய்பாதகத்தி
படு பாவி!நானுனக்கு வார்த்த பால்பாசாங்கு திரவம்என்னரவணைப்புஅட்டைக் கடிசீமைக்கிளியே!கவிபாட பிறந்த உன் திருவாயில்சதிகாரியென் முலை திணித்துபாலூட்டும் போதெல்லாம்உன் பட்தடங்கள் என்முலையில்கரும்புள்ளி செம்புள்ளி குத்துகின்றனதிவட்டா மென்தேனேபெற்றெடுத்த போதும் – உனைபெற்றவன் பெயர் தெரியாதபேரழுக்கு பிண்டம் நான்!பெற்றவன் பெயர் கேட்டுத் தானேஊருன்னை உருட்டிவிளையாடும்அவன் சாடையில் இருப்பதாய் சொல்லும்இவன் சாடையில் இலிப்பதாய் சொல்லும்கருப்பனென்றால் கந்துவட்டிக்காரன்வெள்ளைத்தோலென்றால் ஆன்மீக ஆசாமிராஜமாணிக்கமேரீங்கார இசையேவேசிதான் உன்னன்னைதேகம் விற்று தாகம் தீர்ப்பவள் தான்கால் விரித்து காசு பார்ப்பவள் தான்ஆனால்நல்லத்தாய்சீசுயநல பகட்டுநடக்கவிட்டு நகைக்கும்தேவிடியாள் பெத்ததென காதருகில் கத்தும்பெத்தவனை காட்டச் சொல்லிபேய் கணக்காய் அலறும்கண்மணிஎன்னை விலைபேசஉன்னை தூதனுப்பும்இதுவனைத்தும் தெரிந்தேகருவுக்கு தாட்சண்யம் காட்டுவதாய்சிசுவுக்கு சாபமளித்து விட்டேன்ஐய்யோ அய்யயோஎவனெவனோ விந்துவிட்டகழிப்பறை இருட்டுக்குள்ளாபத்தரை மாதமுனைபட்டினியாய் விட்டிருந்தேன்?
சீராட்சசியாகிய நான்!பேரமுதேபெருந்தவறன்றொகருணையின் பால் இழைத்து விட்டேன்என் வயிறே வற்றிக்கிடக்கஇன்னொரு வயிற்றிற்குஎப்படி படியளக்கப்போகின்றேன்உன் தேகம் வளர்க்கவும்என் தேகம் விற்க நேருமோ நேசமே?உடல் விற்பது தெரிந்தால்உன்னுதடும் எனை வைய்யுமோ நேசமே?வெளியூர் செல்லலாம்வேற்றுலகம் தேடலாம்வெண்மதி தட்டுப்படவெகு தூரம் செல்லலாம்வெண்ணிலவே சென்றாலும்வேசிகளுக்கென்று வசைகள்பார்த்தொதுக்கப்பட்டிருக்கும்
செந்தேனேசீம்பால் மறுத்துகள்ளிப்பால் காட்டியிருக்கலாம்
சீ
யோனியோடு சேர்ந்துஇருதயமும் மரத்துவிட்டதாபேரழகு தோரணம் நீஎவன் என்னச்சொல்லட்டும்நானுனை நாகரிகமாய் வளர்ப்பேன்நாளையிவர் வாயிடையில்கட்டைவிரல் நட்டுவைக்கநாயகனாய் நீ வளர்வாய்
செல்லமே
உன் உதடருகே தாய்ப்பால் எச்சம்துடைத்துவிடும் போதுதூக்கம் தொலைத்து விடாதேநிம்மதியாய் தூங்கியெழு!நாளைக்கு நமக்குபோராட்டம் இருக்கிறது!
- அன்புநாதன் ஹஜன் -
Comments
Post a Comment