அந்தி மழை
தூரத்து மேகம்துளி துளியாய் தன்சேமிப்பைகுளிரூட்டிக் கொஞ்சம்மழையெனத் தூவிசெலவு செய்து செல்லகுளிர் தரும் குதூகலத்தில்குழந்தையாய் மனம்ஜன்னல் திரை விலக்கிஜன்னலையும் திறக்கஅந்தி வண்ணாத்திமலர் மஞ்சத்தில்மதுரமுறிஞ்சிப் பறக்கும்மௌன மரணத்தில்இலைகளை அசைத்துக் காற்றுஅனுதாபம் செய்கிறதுமீண்டும் ஒரு மௌன மரணம்!
எதோ ஒரு எச்சத்தைஅசை போட்டு அசை போட்டுஅழகிய நினைவுகளைததும்பத் தருகிறது ஏகாந்தம்மண்ணோடு மழை சேர்ந்தச் சுகந்தம்!புற்றீசல் புறப்பாடுகளில்
மலைக்குருவி ஒதுங்கலில்நத்தை நகர்வில்
திடீர் குளிரில்
ஏனோ ஒர் புதினப் புழுதிஇயற்கை பேர்கொண்டபெரும் புதிராய் சப்தமிடுகிறது
பேரரசு வீழ்ச்சியில்சிற்றரசு எழுச்சி!மேற்கு அஸ்தமனத்தில்மேக மத்தியில்மெல்லொளியுடன்திறள் திங்கள்!
சூரிய வீழ்ச்சியில்திரள் சூழ் அரை நிலா!
கைகளை நீட்டுகிறேன்நீலவானத்தை ஏகமாய் சுருட்டிஒற்றைத்துளியாய் கையில்ஈகிறது இயற்கைஅழகாய் உதிர்ந்த அந்த சொட்டுஅத்தனை அழகை சுமக்க சிணுங்கிஇத்தனை அழகாய் கையில் விழுந்ததோஅதோ - இன்னோர்
கூறை முனை மழைசொட்டில்மரணப்படுக்கையில் சூரியன்தொத்திக்கொண்டாடுகிறதுஅந்த சொட்டுமென் கையில் விழும்!ஈரச்சிறகுடன் வீட்டுக் குருவியொன்றுமாமர மரக்கிளையில் குந்தி கிடக்கிறதுஅலகை அசைத் தது,மழை ரசிக்கிறதா?குளிர் வெறுக்கிறதா?
ஆறியத் தேநீரும்தேக்கிய சுவையைநடு நாக்கில் நயக்கிஅணைந்தே போகிறது!நாய் குட்டியும் என்னைஅரவணைக்க இழுக்கிறதுகுளிரை விடுக்கவும் மனமில்லைகுளிரால் நடுங்கும் வகை உடலில்லைஅனுமதித்த ஈசல்களே அதிகமாயிற்றுஜன்னலை மூடும் நேரமாயிற்று!
- அன்புநாதன் ஹஜன் -
இதயத்தின் எழுத்தாளர் ..♥️
ReplyDelete