ஐய்யா மூத்த சோதரனே நெஞ்சு முடி மெத்தையாக்கி தூங்க வைத்த தேவதையே அப்பனே எந்தையே எனை பெற்றடுத்தப் பேரருளே! நீங்கள் எனை ஈன்றெடுத்த போது எந்த வயதில் இருந்தீரோ அந்த வயதின் அருகாமையை அண்மித்துக் கொண்டிருக்கின்றேன் இப்போது நான்! ஏகாந்த பொழுதுகளில் எதனையும் விட அதிகமாய் நேசிப்பது உங்கள் நெஞ்சுக்குள் சுருண்டு வெப்பத்தில் உறங்கும் போது அள்ளி அரவணைத்து முத்தமிட்ட நரை விழாத முடியோடு சதை தளராத உங்கள் யவ்வன பிம்பங்களை! ... அப்பா என் முதல் எதிரி நீங்கள்! எந்தப்பொழுதிலும் தாய் - முத்தத்தொடே புலங்கும் போது தூரமிருந்தவாறே தூக்க முனைவீர்கள் கைகளே ஆயுதமாய் கண்டிக்க விரைந்த போதும், தவறுகள் நேர்ந்த நொடி அறிவுறுத்தி கழுத்தறுக்கும் போதும், பொருளாதார விலங்கு உங்கள் சதைகளை குதறும் போது விண்ணப்பித்த விளையாட்டு பொருள் விளக்கி வைத்து நீங்கள் நடந்த போதும் அப்பா என் முதல் எதிரி நீங்கள்! அந்த கண்டனப்பொழுதுகளின் பின்னர் ஆரத்தழுவி எனை அரவணைத்து தலை தடவி விட்ட போது, குழறி இடறிய உங்கள் ஒவ்வொரு வார்த்தைகளின் பின்னும் மறைந்து நின்ற அந்த கண்ணீர் துளிகள் இப்போது என் இருதயத்தில் எண்ணற்ற கருண...