Posts

புதுவரவு

தட்டைப்பயறு

Image
எங்கள் அட்டாளையில் கூடுகட்டும்  வீட்டுக்குருவிக்கு தேங்காய்த்தும்பென்றால் இஷ்டம் சில்லிடும் தண்ணீரள்ளி மூஞ்சிலடித்துக் கழுவும் போதெல்லாம் கண் மூடும் தருணத்தில் பக்கவாட்டில் தவ்வும் கண் திறக்கும் போதெல்லம் குழந்தை போல் பம்மும் சோறிடுவேன் ரொட்டித்துண்டு- விழுங்காத சுவிங்கம்- லாலிப்பொப் கடி- அஞ்சுரூவா முறுக்கு- புளி டொஃபீ- அவ்வப்போது தட்டைப்பயறு குடும்பத்தார் சகிதம் விருந்துண்ணும் குருவிக்கு தேங்காய்த்தும்பென்றால் இஷ்டம் பூண்டு நசுக்கும் போது பிளந்தது கத்திரி குழம்புக்கு அரைக்க உடைத்தது மாவிளக்கோடு கடிக்க உடைந்தது காளாஞ்சியில் ஒட்டியிருந்ததென அத்தனை தேங்காய் நாரையும் பிய்த்து  பாத்திரம் துலக்கவென மோட்டுவளையில் அதக்குவாள் அப்பம்மா! கடைசி தட்டைப்பயற்றுப் பருக்கையையும்  பொறுக்கி விட்டு சிட்டாய் பறக்கும் சிட்டு சற்று நேரத்தில் திரும்பும் குசினிக்கு. செறுகிய பொந்திலிருந்து பொத்தென விழும்  தேங்காய் தும்பின் சத்தம் கேட்டு வயிறும் வளையலும் குழுங்க ‘போங்கடி அங்குட்…’ டென  புடைத்தவாறே சுளகினை எட்டி விசுக்குவாள் நூதனமாய் திருடும் குருவிக்கு தேங்காய்த்தும்பென்றால் இஷ்டம் கன்னத...

கண்ணகியும் CATASTROPHIC காதலனும்

Image
    பனை முறத்தில் சாமை புடைத்துக் கொண்டிருந்த கண்ணகி கோமணத்தோடு வந்த கோவலனை கேவலமாய் பார்த்து குபேர மூலை அலற எகத்தாளமாய் சிரித்தாள்   வெக்கத்தில் குணிந்தவன் வெக்கமின்றி ‘கண்ணகி! என் தெய்வமே!’   என்றான்   தம்பத்தில் ஒளிந்திருந்த காதலர்கள் சத்தம் கேட்டு ஓடிவந்து கோவலனை பார்த்து எகத்தாளமாய் இளித்தனர்   முடியள்ளி முடிந்த பத்தினி சத்தமாய் சொன்னாள் ‘மாதவி மணாள! ஈசான மூலை கதவுக்கு பக்கத்தில் ஈர்க்குமாறு ஓய்வெடுக்கிறது எடு துடப்பம் தெளி சாணம் செய் முறைவாசல்’ என்றாள்   உடையுலர்த்தக் கட்டியிருந்த கயிற்றில் பூனை மேனி துடைக்க – அவள் வைத்திருந்த – அவன் பழைய அங்கவஸ்திரத்தை எடுத்து இடையில் தரித்தவன் கிணற்றருகே சென்று நீரள்ளியெடுத்தான் தெளிப்பதற்கு   பிட்டத்துப் பக்கத்து ஓட்டையில் வெளிதுறுத்திய அவனது குண்டிமுடி பார்த்து எக்ஸ்ற்றா ஐஸ்’இட்ட மாச்சாவை கையிலேந்தி ரெற்றோ பெர்சோல் சன்க்ளாஸ் அணிந்து சிரித்தவாறு பார்த்திருந்தாள் ஆளுடைய நாச்சி   முறைவாசலின் பின்னர் நேர்புள்ளிக் கோலமிட்...

கார்ப்பரேட் காதலி

Image
  சாக்ஸின் கிழிந்த ஓட்டை வழி சப்பாத்தை துலாவியவாறிருந்தது இடது கால் சுண்டு விரல்   ஏஸியின் அனாகரிக குளிர் சட்டைக்குள் ஊடுருவி நடுக்கம் கொடுத்துக்கொண்டிருக்க வாட்டர் ஃபில்டரில் தண்ணீர்க்குமிழ்கள் மேற்தளம் நோக்கி நகர்கின்றன   டௌன்லோட் செய்ய போட்டப் படம் பாதி பதிவிறங்கியிருக்க பார்வை படும் தூரத்திலிருந்து பல்லிளிக்கிறான் படுபாவி டீம் லீடர்   எச்.ஆர் லேடியின் கூந்தல் சரிவினை வாய் பிழந்து பார்த்துக்கொண்டிருக்க மேசையின் அருகே வந்த மாலை தேனீரில் டோப்பமின் வழிகிறது   ப்ளைண்டர்ஸ் வழியே பொழிகின்ற சுந்தர பொன்னிற சூரிய கதிர்கள், என்னை முந்தி விட ஆசை என்பது போல் நான் சுவைக்கும் முன்னமே பருகத்தொடங்கிவிட்டன கோப்பையில் விழுந்து தேனீரை…   “ப்ரமோஷன் தருவானா மாட்டானா? லீகல் டிப்பார்ட்மென்ட்ல அந்த பொம்பள ஏன் வரல? கெஷுவல் லீவ் இன்னும் நாலு தான் மிச்சம் புதுசா வந்த இன்டெர்ன் பொன்னுக்கு ஆள் இருக்குமா? அடங்கோத்தா கடசி மெயில்ல எழுத்துபிழ! இன்வொய்ஸ்ல ரெண்டாயரம் இடிக்கிதே சம்பளம் வந்த ஒடன ரெண்டு ஜட்டி வாங்கனும்”  ...

ப்ரூம்ஹில்டா

Image
  இன்னுங்கொஞ்ச நேரம்… இறுக கடித்துக்கொள் உன் பட்களை  பருத்திப்பூ ரெண்டு பரித்து மார்பக வடுக்களில் வடியும்  ரத்தம் துடைத்துக் கொள் ப்ரூம்ஹில்டா... அழகான பேருக்குச் சொந்தக்காரியே! ஆண்டுகள் ஆகிறது – உன்  ஆசை முகம் பார்த்து  ஆறுதல் இல்லாமல் தேய்கிறது – உயிர் ஆதுர பார்வைகள் தீர்ந்து மலைகளை மிதித்து கடல்களை குடித்து காடுகளின் பச்சைக் கூந்தல் தின்று எரிமலைகளில் மேல் கழுவி உனை தேடிய பாதையில் பாதியை கடந்து விட்டேன் இன்னும் கொஞ்சம் தான்  மிஞ்சியிருக்கிறது உலகில் ப்ரூம்ஹில்டா… உன் சுருள் முடித்தேடிய – இந்த ஓட்டம் ஒய்வுகள் இல்லாமலும் ஒய்யாரமாய் தெரிகிறது  நீ… எங்கிருந்தாலும் சரி மிசிசிப்பி பக்கமிருந்து வீசும் காற்றுக்கு உன் முதுகு காட்டி திரும்பியிரு நானனுப்பிய முத்தங்கள் ஆசுவாசமாய் அந்த  கசைத்தழும்புகள் மீதமரட்டும்  ப்ரூம்ஹில்டா... அழகான இதயத்தின் சொந்தக்காரியே! பருத்திக்காட்டில் வியர்த்து வெயில் வெந்த உதட்டோடு இரவுக்கு முந்திய பகல் பொழுதில் கால் விலங்குக்குக் காயப்பட்ட கணுக்காலில் கண்ணீர் கலந்து  முத்தம் வைத்தாய் நினைவிருக்கா? இன்று வரை அது தான் அ...

அணைக்க மறந்த கதை

Image
பைத்தியம் பிடித்த - கடல் உறுமிக்கொண்டிருந்தது   வாகன நெரிசலில் -  தரை பொருமிக்கொண்டிருந்தது இடியோடு கத்தி - வானம்  அழுதுக்கொண்டிருந்தது வழமைக்கு மாறாக - காற்று விசிரிக்கொண்டிருந்தது நம் உதடுகளில் - சிகரட்  எரிந்து கொண்டிருந்தது ஐம்பூதம் ஒருமித்த இரவில் அந்தரத்தில் நின்றிருந்தோம் மேம்பாலம் இருபது கால் விரல்களிலும் - ரேகை எண்ணிக்கொண்டிருந்தது! நீ இடப்பக்கம்  நான் வலப்பக்கம் நாகரிக இடைவெளிக்கு நடுபக்கம்! உன் ஒரு கையில் பூங்கொத்து, உரசி நடக்க வழிவகுத்து  மழையில் குடித்த தண்ணீரை மெது மெதுவாய் உதறிக்கொண்டிருந்த  அந்த ஒற்றைச்சிறுகுடை  மறுகையில். குடையை நான் வாங்கி கீழ் வைக்க நனைந்த உன்னை பொருட்டில் கொள்ளாமல் நானளித்த பூங்கொத்தின்  ரோஜாக்களின் மேல் படிந்த மழைத்திவலைகளை துவடிக் கொண்டிருந்தாய் சாபவிமோச்சனம்! உன் கைப்பையின்  இரண்டாம் சிப்பரை திறந்து சிரித்துக்கொண்டிருந்த டன்ஹில் பெட்டியை வெளியிலெடுத்தாய் மற்றைய சிப்பரிலிருந்து லைட்டரை எடுத்தாய் பற்றவைத்தோம் போர்வை போர்த்தியிருந்த இரவு சிகரட் வெளிச்சத்தில் உடலுலுப்பி விட்டு  கண் சிமிட்டி ம...

கைக்கிளை திணை

Image
மௌனத்தைக் காவல் வைத்து பெருநகரம் உறங்கையிலே இருட்டின் சலனம்  இதயத்தை உழற்றையிலே உயிரோடு இருப்பதை  நினைவூட்டுவதெல்லாம் உன் உதட்டுக்குக் கீழ் விழும்  அழகிய குழி! விண்மீன் விற்க வந்தவளே! உலகத்தின் உயர்ந்த விளிம்புகள்  எப்போதும் என் கால்களை தேடையிலே ஓய்வெடுக்கப் பாய்விரிப்பது உன் பச்சை துப்பட்டா! வாழ்வு... இருசாராருக்கு... வாழப்பிடித்தவர்களுக்கு சாகப்பிடித்தவர்களுக்கு நீ  உன் மென்னகை  ஸ்பரிசம் பிட்டம் வரை நீளும் முடி நெட்டை விரல் நீழுதடு... நான் தினம் செத்துப் பிழைப்பதற்கு! நான் உலகம் புரியாத மூடன் நான் அசௌகரியம் நான் அனர்த்தம் நான் கெட்ட சகுனம் நீ  சாப விமோசனம் சாயங்கால வெய்யில் சாபல்யம்! இருட்டியே கிடக்கும் என் உலகம் உன் கூந்தல் சுகந்தத்துக்குத் தானே மின்மினி மேய விடுகிறது! நீயென்பவள்  கடலை தனதாக்கி நீந்தும் நீலத்திமிங்கிலம்  நான் உன் பரந்த இறக்கைகளின் கீழ் உறவாடும் சின்ன மீனினம் உலகத்தின் உன்னதமான செயல் உன்னோடு நடப்பது. உலகத்தின் நீண்ட கடல் பயணம் உன் கண் பார்த்து கதைப்பது. என் கண்களுக்கு வலிக்க உன் கண்களுக்கு மையிடுபவளே! என் வாழ் மீது படிந்த த...

கபிலவஸ்து ரோஜாக்கள்

Image
கண்மணி மென்விரல் மீண்டும் பிடிக்கக்  காலம் இனி இல்லையென்று கண்ணீர் தேற்றி காலாறும் நேரமிது நித்திய கல்யாணி மீது தொத்திக் கொண்டாடும் மழைத் திவலையின் சலனம் இதயத்துடிப்பை இரட்டிப்பாக்கும் போது என்னருகில் நீ இல்லை. ஞான மேடையில் அமர்ந்து விழி மூடி நீ ஆதியந்தம் தேடயிலே பாதங்களில் வந்து விழும் அத்தனை போதி மர இலைகளிலும் நான் விட்ட கண்ணீரின் கரிப்புத் தன்மை படிந்திருக்கும்! கௌத்தமா பூனைப்பாதம் பொருத்தி நீ எனை நீங்கி ஒடையிலே சயனத்திலோ, குழந்தை வெளித்தள்ள யோனி கிழித்த வலியினிலோ புரண்டு படுத்திருந்தேனெனவா எண்ணினாய்? இதயம் கிழிந்த வலியோடும் சதா காலத்திற்கும் தொலையப்போகும் சாசுவத சயணத்தொடும் அக்கப்போரடித்தவண்ணம் பாதச்சந்தம் கேட்க விழித்துக் கொண்டிருந்தேன் எனக்கும் உனக்கும் ஆறுதல் தேடி அழுது கொண்டிருந்தேன்! விம்மிப்பொறுகி ஓலமிட்டால் திரும்பி விடும் – உன் தணிந்த கழல் பாதமென்ற நப்பாசையும் ஏகாந்தம் மீது நீ பூண்ட உறவுக்கிடையில் சக்களத்தியெனக் குறுக்கிடத் தவிக்கும் காதலெனும் தப்பாசையும் ஒன்றிணைய, உயிரையும் உடலையும் வேறுபடுத்திக் கிழித்து உச்சஸ்தாயி மௌனத்தில் கத்திக் கொண்டிருந்தேன்! விடியலுக்கு முன்னே...

Most probably One last time!

Image
Most probably I'll breathe my last breath today Most probably This stone heart will pump a gallon of red wine today Most probably  I'll sing a song for myself  Most probably  I'll smoke the cigarette down to the filter  For one last time My tear would lick the wounds of yesterday's pimples Most probably  This would be my last poetry Dear Mama Tree of this black coffee bean The first drop of milk My own breasts Dear Mama Let's recre ate the  Pietà Hold my lying flesh Between your laps Scream my name out Wash my stinking wounds with your tear Dear sparrow Whistle my last poetry in whispers To the deaf word To the people I loved Then Hang yourself in this big fig Be the next to my grave Dear friend  Embrace my chunk of guilt and regret  Sing that song we used to sing At our downs And at our highs Dear friend  Please bring the guitar  Dear diary My demon My dear sperm, my innocent child Please hide yourself  Please fucking do that ...

தென்மேல் பருவம்

Image
கேள் தொல்லை கொடு அலுவல்கள் முடிந்ததும் காஃபி குடிக்க கூப்பிடு பரஸ்பர தனிமைகளை நிரந்தர நிர்மூலமாக்கு  மூக முகமே அடிநெஞ்சு அசைபோடும் ஆசைகளை பகிர் உன் காயத்தின் ஆழம் தெரியாத மூடனா நான்? வியர்க்கும் விரல்களின் மென்மை புரியாதவனா நான்? நீயாய் கட்டமைத்த சுவர் என்னையும் உன்னையும் விதி மீற விடாத போது எப்படி நாம் நிறம் மாறுவது? சரி ஆண் வாசம் பிடிக்காதவள் நீ பிரக்ஞை இல்லாமல் கன்னம் கைவைத்து ஒப்புவிப்பதெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கும் என் பெண்மையின் முகத்திடலில் என்றேனும் ஒரு கணம் உடைந்து அழேன் தீண்டத் துடிக்காதா கரங்கள்? சேர்ந்து நடிக்காதா கண்கள்? நீ முகமூடி தரித்திருக்கும் லட்சணம் அவ்வப்போது மெய் மறந்து சிரிப்பதில் அலங்கோலமாய் அழகு சிந்தும் முன்னிருப்பல்லின் வழி அழகாய் தெரிகிறது உன் பெண்மை என்னிடம் மென்மையாக சுவாசிக்கிறது! உனக்கு எனதும் எனக்கு உனதும்  அருகாமைகள் பிச்சையிடும் கண்ணியமான கதகதப்பு வெறுமைகளை  கழுவேற்றுவது சத்தியமாய் தெரியாதா? எது உன் பயம் எது என் பயம்? உன் ஆண்மையை சித்தரி  கவிதைக்கு பேனா மை தொடு மணவெளி திறந்து சற்றே தலைசாய்த்து வல இதழோரம் நீயுதிர்க்கும் சத்தமற்ற புன்...

நமக்கென பெருநகரம்

Image
வா வா அடுக்குமாடி சிறையின் சுதந்திரமற்ற காற்றையே  எத்தனை நாள் தான் சுவாசிப்பாய் வா வா வெளியே குதித்து விடு இறுக்கமாய் கை பிடித்துக்கொள் நகரத்தெருக்களின் ராத்திரி வண்ணங்கள் உன் எண்ணங்களைப்போலவே  சினன்னாப்பின்னமான அழகு கடற்கரை முந்தி விரித்துக் காத்திருக்கிறது திடல் அமர்ந்தவாறு எச்சில் துப்ப வா! கண்ணீரில் மட்டுமல்ல சுவாசத்திலும் உப்புப் பூக்கட்டும் துருப்பிடிப்பதா நம் உடல்? காலிடுக்கில் குடியமரும்  தற்காலிக பூனைகளின் உடல் கோதலாம் விழுதுவிட்டு காத்திருக்கும் கற்கால மரங்களின் உடல் தீண்டலாம் திரையரங்குகளின் தீண்டப்படாத இருக்கைகளின் தாகத்தை உதட்டெச்சில் கொட்டியே தீர்த்து விட்டு போகலாம் கோல்ஃபேஸ் றால் வடை கொறித்து கொச்சிக்கடை வரை நடக்கலாம் கொம்பனி தெரு நெய் தோசைத் துண்டுக்கு கொட்டிக்காவத்தையிலிருந்தே நடைபவனி போகலாம் அதே புத்தகங்கள் அதே கக்டஸ் செடிகள் அதே சோஃபா அதே நெட்ஃபிளிக்ஸ் பொய்கள் அதே புராணம் மிஞ்சிப் போனால் நாகரீக காஃபி ஷாப்ஸ்  சலிக்கவில்லையா? சிரிப்பு வருகிறது! ராத்திரி வேளைகளில் விழித்துக் கொள்ளும் வர்த்தக நகரத்தின் கருவளையம் தெரியுமா? வா வா மேகங்களிடமிருந்து தப்பித...

இசை

Image
ஒத்துழைக்கும் ஓசைகளின் ஒருமித்தத் தொகுப்பு அவ்வப்போது ஒருக்களித்து படுத்திருக்கும் கடைசி நிசப்தத்தின்  கெட்டச் சொப்பனம் அவ்வப்போது சடை பிறிந்து விழுந்தழுகின்ற ரோஜா பூக்களின் அமைதிக் கதறல்  மென்மை பயில்விக்கும் ஆஸ்தான கூடம் சீவிக்கும் எதொன்றும் சிரமமின்றி அருந்தும் கலை  மனிதன் தோற்றுவித்த உன்னதமான தெய்வீகம் நீங்கள்-நான்-இரவு இந்த சடலங்களை எல்லாம் அடிக்கடி உயிரூட்டுவது எது? சீள்வண்டு ஃபேன் சத்தம் எரி நட்சத்திரம் குறட்டை கொசுவர்த்தி அல்லது  நீங்களோ-நானோ-யாரோ அருகாமை அல்லது தொலைவில் ஒலிக்கவிட்ட  ஒரு பாட்டு உலகப்பச்சியங்களின் ஒழுக்கச் சங்கமம் தானே பிரபஞ்சம்? அதே தத்துவம் தானே இசையும் சொல்லித் தருகிறது? இசை ஆன்மாவின் தங்குமிடம் மலிவான ஞான மார்க்கம் சௌந்தர்ய வியாபாரம் நீட்ஷேவையும் பீத்தோவனையும் ஒரே மேடையில் வைத்தால் தத்துவவியலாளருக்கான வாக்கை கள்ள ஓட்டையும் சேர்த்து செவிட்டுக் காதனுக்கு சேர்ப்பேன்! சப்தங்களையெல்லாம் நிசப்தமாய் படைப்பதால் தானே இசைக் கலைஞர்களுக்கு வரிந்து கட்டி வக்காளத்துப் பெறுகிறேன் இசை பாலுறிஞ்சும் குழந்தையின் உண்ணாக்கு முனகல்  கட்டில் உடைக்கும் ...