Posts

புதுவரவு

Most probably One last time!

Image
Most probably I'll breathe my last breath today Most probably This stone heart will pump a gallon of red wine today Most probably  I'll sing a song for myself  Most probably  I'll smoke the cigarette down to the filter  For one last time My tear would lick the wounds of yesterday's pimples Most probably  This would be my last poetry Dear Mama Tree of this black coffee bean The first drop of milk My own breasts Dear Mama Let's recre ate the  Pietà Hold my lying flesh Between your laps Scream my name out Wash my stinking wounds with your tear Dear sparrow Whistle my last poetry in whispers To the deaf word To the people I loved Then Hang yourself in this big fig Be the next to my grave Dear friend  Embrace my chunk of guilt and regret  Sing that song we used to sing At our downs And at our highs Dear friend  Please bring the guitar  Dear diary My demon My dear sperm, my innocent child Please hide yourself  Please fucking do that ...

தென்மேல் பருவம்

Image
கேள் தொல்லை கொடு அலுவல்கள் முடிந்ததும் காஃபி குடிக்க கூப்பிடு பரஸ்பர தனிமைகளை நிரந்தர நிர்மூலமாக்கு  மூக முகமே அடிநெஞ்சு அசைபோடும் ஆசைகளை பகிர் உன் காயத்தின் ஆழம் தெரியாத மூடனா நான்? வியர்க்கும் விரல்களின் மென்மை புரியாதவனா நான்? நீயாய் கட்டமைத்த சுவர் என்னையும் உன்னையும் விதி மீற விடாத போது எப்படி நாம் நிறம் மாறுவது? சரி ஆண் வாசம் பிடிக்காதவள் நீ பிரக்ஞை இல்லாமல் கன்னம் கைவைத்து ஒப்புவிப்பதெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கும் என் பெண்மையின் முகத்திடலில் என்றேனும் ஒரு கணம் உடைந்து அழேன் தீண்டத் துடிக்காதா கரங்கள்? சேர்ந்து நடிக்காதா கண்கள்? நீ முகமூடி தரித்திருக்கும் லட்சணம் அவ்வப்போது மெய் மறந்து சிரிப்பதில் அலங்கோலமாய் அழகு சிந்தும் முன்னிருப்பல்லின் வழி அழகாய் தெரிகிறது உன் பெண்மை என்னிடம் மென்மையாக சுவாசிக்கிறது! உனக்கு எனதும் எனக்கு உனதும்  அருகாமைகள் பிச்சையிடும் கண்ணியமான கதகதப்பு வெறுமைகளை  கழுவேற்றுவது சத்தியமாய் தெரியாதா? எது உன் பயம் எது என் பயம்? உன் ஆண்மையை சித்தரி  கவிதைக்கு பேனா மை தொடு மணவெளி திறந்து சற்றே தலைசாய்த்து வல இதழோரம் நீயுதிர்க்கும் சத்தமற்ற புன்...

நமக்கென பெருநகரம்

Image
வா வா அடுக்குமாடி சிறையின் சுதந்திரமற்ற காற்றையே  எத்தனை நாள் தான் சுவாசிப்பாய் வா வா வெளியே குதித்து விடு இறுக்கமாய் கை பிடித்துக்கொள் நகரத்தெருக்களின் ராத்திரி வண்ணங்கள் உன் எண்ணங்களைப்போலவே  சினன்னாப்பின்னமான அழகு கடற்கரை முந்தி விரித்துக் காத்திருக்கிறது திடல் அமர்ந்தவாறு எச்சில் துப்ப வா! கண்ணீரில் மட்டுமல்ல சுவாசத்திலும் உப்புப் பூக்கட்டும் துருப்பிடிப்பதா நம் உடல்? காலிடுக்கில் குடியமரும்  தற்காலிக பூனைகளின் உடல் கோதலாம் விழுதுவிட்டு காத்திருக்கும் கற்கால மரங்களின் உடல் தீண்டலாம் திரையரங்குகளின் தீண்டப்படாத இருக்கைகளின் தாகத்தை உதட்டெச்சில் கொட்டியே தீர்த்து விட்டு போகலாம் கோல்ஃபேஸ் றால் வடை கொறித்து கொச்சிக்கடை வரை நடக்கலாம் கொம்பனி தெரு நெய் தோசைத் துண்டுக்கு கொட்டிக்காவத்தையிலிருந்தே நடைபவனி போகலாம் அதே புத்தகங்கள் அதே கக்டஸ் செடிகள் அதே சோஃபா அதே நெட்ஃபிளிக்ஸ் பொய்கள் அதே புராணம் மிஞ்சிப் போனால் நாகரீக காஃபி ஷாப்ஸ்  சலிக்கவில்லையா? சிரிப்பு வருகிறது! ராத்திரி வேளைகளில் விழித்துக் கொள்ளும் வர்த்தக நகரத்தின் கருவளையம் தெரியுமா? வா வா மேகங்களிடமிருந்து தப்பித...

இசை

Image
ஒத்துழைக்கும் ஓசைகளின் ஒருமித்தத் தொகுப்பு அவ்வப்போது ஒருக்களித்து படுத்திருக்கும் கடைசி நிசப்தத்தின்  கெட்டச் சொப்பனம் அவ்வப்போது சடை பிறிந்து விழுந்தழுகின்ற ரோஜா பூக்களின் அமைதிக் கதறல்  மென்மை பயில்விக்கும் ஆஸ்தான கூடம் சீவிக்கும் எதொன்றும் சிரமமின்றி அருந்தும் கலை  மனிதன் தோற்றுவித்த உன்னதமான தெய்வீகம் நீங்கள்-நான்-இரவு இந்த சடலங்களை எல்லாம் அடிக்கடி உயிரூட்டுவது எது? சீள்வண்டு ஃபேன் சத்தம் எரி நட்சத்திரம் குறட்டை கொசுவர்த்தி அல்லது  நீங்களோ-நானோ-யாரோ அருகாமை அல்லது தொலைவில் ஒலிக்கவிட்ட  ஒரு பாட்டு உலகப்பச்சியங்களின் ஒழுக்கச் சங்கமம் தானே பிரபஞ்சம்? அதே தத்துவம் தானே இசையும் சொல்லித் தருகிறது? இசை ஆன்மாவின் தங்குமிடம் மலிவான ஞான மார்க்கம் சௌந்தர்ய வியாபாரம் நீட்ஷேவையும் பீத்தோவனையும் ஒரே மேடையில் வைத்தால் தத்துவவியலாளருக்கான வாக்கை கள்ள ஓட்டையும் சேர்த்து செவிட்டுக் காதனுக்கு சேர்ப்பேன்! சப்தங்களையெல்லாம் நிசப்தமாய் படைப்பதால் தானே இசைக் கலைஞர்களுக்கு வரிந்து கட்டி வக்காளத்துப் பெறுகிறேன் இசை பாலுறிஞ்சும் குழந்தையின் உண்ணாக்கு முனகல்  கட்டில் உடைக்கும் ...

ராத்திரி ஓலமிட்டப்போது

Image
  ஒரு வேசி படிக்கட்டின் மேலிருந்து ரெட்டை விரல் காட்டியழைத்தாள் முகமூடி அணிந்திருந்த அவள் முகம் கருத்திருந்தது எதுமறைக்க முகம் மறைத்தாளென அறியேன் மெளிந்த உடல் - புடைத்த நாளங்கள் அலங்கோலமாய் கந்தல் நாப்பது தாண்டிய நரை கையிலொரு பிளாஸ்டிக் பை! ரெட்டை விரல் குறிப்பு? ரெண்டாயிரந்தான் வந்து படு என்று அர்த்தம் கொண்டு நடக்கப் பார்த்தேன் அவள் கண்கள் சிவந்திருந்தன யார் மீதான கோவம்? அல்லது கஞ்சாவா? இல்லை ரெட்டைக் கொட்டை இருக்கிறதா பரத்தையின் மகனே என்று தான் கேட்டாளா? அவள் அலங்கோல உடலுக்கு ரெண்டாயிரந்தான் அடுக்குமா? ராத்திரி முழுக்க நின்றாலும் ரெண்டாயிரந்தான் தேருமா? ஆணுறைக்கு நானூறு போக கருத்தடை வில்லைக்கு எண்ணூறு போக எண்ணூறு தான் விஞ்சுமா அவளுக்கு? இல்லை படுத்த இடத்துக்கு அதிலும் பாதியா? சாப்பிட்டிருப்பாளா? சப்பச் சொல்லி அடிவாங்கி இருப்பாளா? அழுதிருப்பாளா? திருப்பிதான் அடித்திருப்பாளா? எப்படியும் இன்றோ நாளையோ போய்விடுவாள் போலிருக்கும் அவள் இந்த ஒற்றைத் தரமேனும் எவனிடமும் அடிவாங்காமல் ராத்திரி கழிந்தால் சரி! தொடர்ந்தும் நடக்க தலையின் மேல் பெருமரம் சுமந்த பூவொன்று  தோப்பென விழுகிறத...

முரண்பட்ட முறுவல்

Image
திடீரென வாழ்க்கை  ஒரு கோழியின் சிறகு தந்து சூரியன் பிடிக்கச் சொன்னது முக்கினேன் பறந்தேன் தொப்பென விழுந்தேன் சதை கழித்தேன் முடி மழித்தேன் தொடையில் ஒரு துண்டு பல்லை இறுக கடித்துக்கொண்டு அத்தெடுத்து எறிந்தேன் எடை குறைந்தது பறக்கத் துணிந்தேன் மீண்டும் சிறகு கணத்தது  வலியால் துடித்தது இறகுத் துவாரங்களில்  கண்ணீர் விட்டது ஒவ்வொரு அவயமாய் அத்துப் பிய்த்து வீசினேன் சூரியன் தொட்டு விட்டால் வலி கரையுமென கண்டது அத்தனையும் கடித்தேத் துப்பினேன் வாழ்க்கைச் சிரித்தது முகமூடி கழற்றிவிட்டு நீந்தத்தானே சொன்னேனென அண்ணாக்குத் தெரிய நகைத்தது அழுதேன் சிரித்தது அழுதேன் சிரித்தது அழுதேன் சிரித்தது மன்னிப்புக் கேட்டுப் புரண்டேன்  பின்வருத்தம் வெகுண்டேன் சுயம் வெறுத்து கணைத்தேன் ரெக்கைப் பிய்த்தெரிந்து  வன்மையற்று விழுந்தேன் கோழியை காரித்துப்பி தங்கமீனொன்றை  துரத்திப் பிடித்தேன் கால்களை கத்தரித்து விட்டு வாலொட்டிக் கொண்டேன் தோள் உரித்து விட்டு செதிலுடுத்திக் கொண்டேன் மூக்கறுத்துக் கொண்டு செவுள் மாற்றிக் கொண்டேன் உதடுகள் ஒருமித்த வண்ணம் ஓரங்க அபிநயம் செய்தேன் கண்கள் கண்ணீரில் இருந்தன...

மௌனத்தில் புதைந்த கவிதை

Image
புத்தக சாலையின் பூச்செடிக்கருகே இரண்டு பெருமலர்கள் பூத்திருக்கக் கண்டேன்   ஒன்று பாரசீக ரோஜா ஒன்று நீங்கள்   ரோஜா... இலைகளுக்கிடையில் மறைந்திருந்தது நீங்கள்… ஹிஜாபிற்கிடையில் ஒளிந்திருந்தீர்கள் உங்கள் வாகு புரியாத மௌனம் கள்ள விழிகள் கையில் புத்தகம் இருதயமும் மேற்தோலும் ஒரு சேர வலியில் துடித்தது!   ஸரீனா!    நினைவிருக்கிறதா உங்களுக்கு? ஒழிந்து நான் பார்த்துக் கொண்டிருக்க ஏதோ பற்றிக் கேட்டீர்கள் புரியாமல் தவித்த போது கண்களால் புத்தகம் காட்டி எங்கிருந்து எடுத்தீர்கள் என்றீர்கள் தொண்டை நெளிந்து திணறிய போது சிரித்து விட்டுக் கடந்தீர்கள்   நினைவிருக்கிறதா அன்றிலிருந்து நீங்கள் – என் அத்தியாவசியம்! உங்கள் நீண்ட விரல்கள் சத்தமற்றச் சிரிப்பு மைய்யிட்டக் கண்கள் காய்ந்த உதடு முகப்பருக்களின் களஞ்சியமாய் எப்போதும் சிவந்த கன்னம் உங்கள் அருகிலிருந்த போதெல்லாம் திருட்டுத் தனமாய் ரசிப்பேன் இரவுக்கு முந்திய பொழுதுகளில் நாட்குறிப்பில் திருஷ்ட்டிக் கழிப்பேன் அத்தனை அழகு நீங்கள் அத்தனை அழகு நீங்கள்! நன்றாகத் தெரியும் எனக்கு பேசும் போதிலெல்லாம் உங்கள் கண்கள் பார்த்துக் கதைப்பது ...

மோன சிவிகையிலே

Image
ஐந்துமணி வெய்யில் ஆலமர நிழல் காலுரசும் பூனை கள்ளுக்கருவாடு சேமங்கீரை தேங்காய்ப்பூ ரொட்டி மணல் சீத்தா மாங்காய் - உப்பு கடற்கரை காக்கை சத்தம் மழை மேகம் மாலை நேரம் ராஜா பாட்டு ராத்திரி விட்டில் வரப்பு நடை வாத்துக் கூட்டம் தயில வாசம் வெந்நீர் குளியல் கஞ்சா வாசம் காகிதக் கப்பல் கருப்பு மேகம் காது குடைதல் ரோஜா தோட்டம் பனித்துளி தேநீர் வடை தேயிலைத் தோட்டம் தென்றல் காற்று தென்னந்தோப்பு நீல வானம் காலையில் போர்வை பகல் பிறை  பிஞ்சுக் கொய்யா லயத்துச் சண்டை சேலையில் பிட்டம் அமாவாசை பௌர்ணமி நிலவு அடங்காத மழை ஊரடங்கும் நேரம் அத்தர் வாசம் அசதி கதைகள் மெதுவடை  வெள்ளை வானம் ஈரக்காற்று நனைந்த சன்னல் சில்லென பீர் சின்னச் சிரிப்பு புரிந்துணர்வு கொசுக்கடி தொடுவானம் கோழிக்குஞ்சு பெட்ரோல் வாசம் இன்ஸ்டாகிராம் நீ  உன் இருப்பு கட்டியணைத்தல்  ஒரே தலையணை வாயில் உன் முடி நெஞ்சில் உன் கடி  ரத்தமெங்கும் உன் எச்சில் சட்டையெல்லாம் உன் வாசம் உன் தொடையில் நான் என் தலையில் உன் கை மூடியவாறு நான்கு கண்கள் திறந்து கொள்ளும் பிரபஞ்சம் உன் வெப்பம் என் வியர்வை உன் ஆதிக்கம் என் கவிதைகள் நம் வீடு நம் தனிமை ...

ஒரு பரத்தையின் கருத்தரங்கு

Image
வா பெண்ணே வா வாலிபத்து விஷயங்களை சேலையிட்டு மறைத்திருக்கும் யவ்வன பெண்மணியே  உன்னையும் இந்த இரவையும் ஒருமித்து வரவேற்கிறது இந்த பெருமித்த அந்தப்புரம்! வா பெண்ணே வா  உலகத்தின் உன்னதமான தீர்மானம் உன்னது! கல்லடிகளை தாண்டி சொல்லடிகளை தாண்டி ஆடவர் கட்டமைத்த இந்த அநியாய புவனம் ஆழ்வது ஆடவர் மயக்கி சாசனம் எழுதுவிக்கும் வேசிகளே! உனக்கொன்று சொல்லட்டா பக்கத்து தேசத்து இளவரசிகளை விட புள்ளிமான்களை விட தோகை மயில்களை விட ராணிகள் அதிகமாய் பொறாமைப்படுவது  நம்மை கண்டுத் தான்! அழகும் ஆடம்பரமும்  ஆணவமும் அதிகாரமும் ஒருங்கிணைந்து ஆசூயை கொள்ளும் ராட்சஸ தேவதைகள் நாம்! தகப்பனும் தமையனும் தோள் கொடுப்பதாய் சொன்ன தொன்னை நக்கி புருஷனும் கை விட்டதால் தானே தாசியர் சங்கமத்தில் சரண் புகுந்தாய்? மன்னவரும் மந்திரியும் மன்மத மாதவரும் ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு காலிடுக்கில் நா பதிக்கும்  மாண்புமிகு சாமியரும்  உன் அக்குளுக்கு அருகில் அடைக்கலம் புகுவர்! உன் உடலை அடிமைப் பொருளாக்க  ஆழ்மனதை அங்கீகரிக்காதே தாபத்தால் ஆன உடலை அட்ப தாகத்தால் தவிக்கும் ஆடவரை அடக்கி ஆட்சி செய்ய பணி! இது வாழ்க்கை...

மகற்காற்று நன்றி

Image
ஐய்யா மூத்த சோதரனே நெஞ்சு முடி மெத்தையாக்கி  தூங்க வைத்த தேவதையே  அப்பனே எந்தையே எனை பெற்றடுத்தப் பேரருளே! நீங்கள் எனை ஈன்றெடுத்த போது எந்த வயதில் இருந்தீரோ அந்த வயதின் அருகாமையை அண்மித்துக் கொண்டிருக்கின்றேன் இப்போது நான்! ஏகாந்த பொழுதுகளில் எதனையும் விட அதிகமாய் நேசிப்பது உங்கள் நெஞ்சுக்குள் சுருண்டு வெப்பத்தில் உறங்கும் போது அள்ளி அரவணைத்து முத்தமிட்ட நரை விழாத முடியோடு சதை தளராத உங்கள் யவ்வன பிம்பங்களை! ... அப்பா என் முதல் எதிரி நீங்கள்! எந்தப்பொழுதிலும் தாய் - முத்தத்தொடே புலங்கும் போது தூரமிருந்தவாறே தூக்க முனைவீர்கள் கைகளே ஆயுதமாய் கண்டிக்க விரைந்த போதும், தவறுகள் நேர்ந்த நொடி அறிவுறுத்தி கழுத்தறுக்கும் போதும், பொருளாதார விலங்கு  உங்கள் சதைகளை குதறும் போது விண்ணப்பித்த விளையாட்டு பொருள் விளக்கி வைத்து நீங்கள் நடந்த போதும் அப்பா என் முதல் எதிரி நீங்கள்! அந்த கண்டனப்பொழுதுகளின் பின்னர் ஆரத்தழுவி எனை அரவணைத்து  தலை தடவி விட்ட போது, குழறி இடறிய  உங்கள் ஒவ்வொரு வார்த்தைகளின் பின்னும் மறைந்து நின்ற அந்த கண்ணீர் துளிகள் இப்போது என் இருதயத்தில்  எண்ணற்ற கருண...